எங்கும் மரணத்தின் ஓலம், நாட்டை ஆள்பவர்கள் கண்ணீர் மழை பொழிய வேண்டுமே? ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு


எங்கும் மரணத்தின் ஓலம், நாட்டை ஆள்பவர்கள் கண்ணீர் மழை பொழிய வேண்டுமே? ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு
x
தினத்தந்தி 18 May 2021 4:32 PM GMT (Updated: 18 May 2021 4:32 PM GMT)

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

‘‘உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்’’ (குறள்: 442)

நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழக்கிறார்கள என்று அரசு சொல்கிறது. அப்படியென்றால் ஒரு மணி நேரத்தில் சுமார் 165 பேர் மரணமடைகிறார்கள். 4 நிமிடத்தில் 11 பேர்! பெருந்துயரம். எங்கும் மரணத்தின் ஓலம். இந்த அவலத்திற்கு இந்த நாட்டை ஆள்பவர்களின் கண்கள் கண்ணீர் மழை பொழிய வேண்டுமே? அவர்கள் கண் கலங்க மாட்டார்கள். அவர்கள் இதயத்தில் ஈரமில்லாத கல் நெஞ்சக்காரர்கள் அல்லவா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story