பாலியல் புகாருக்குள்ளான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்


பாலியல் புகாருக்குள்ளான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 24 May 2021 11:05 AM GMT (Updated: 24 May 2021 11:13 AM GMT)

பாலியல் புகாருக்குள்ளான சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை

சென்னையில்  கே.கே.நகரில் உள்ள  தனியார் பள்ளி ஆசிரியர்பள்ளி மாணவியருக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு  எழுந்தது.

இது தொடர்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவுத் துணை ஆணையர் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார்

பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெர்விக்கப்பட்டு உள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட மாணவியரிடமும் விசாரித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பாலியல் புகாருக்குள்ளான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story