விரைவில் தமிழகம் மீளும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
கொரோனா தொற்றில் இருந்து விரைவில் தமிழகம் மீளும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வருகிற ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை தந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்,
#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி! நன்கொடை-செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்!
விரைவில் தமிழகம் மீளும்! என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி!
— M.K.Stalin (@mkstalin) May 29, 2021
நன்கொடை-செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்!
விரைவில் தமிழகம் மீளும்!
இணையசேவை-கடன் அட்டை மூலம் வழங்க:https://t.co/nTVBr8KJ1k
UPI- VPA ID: tncmprf@iob pic.twitter.com/EZfynL7sWo
Related Tags :
Next Story