சட்டசபை கூடும்போது ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வரும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 May 2021 7:38 PM GMT (Updated: 31 May 2021 7:38 PM GMT)

சட்டசபை கூடும்போது ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை, 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலா ஒரு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி இருக்க வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்திருக்கிறோம். பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவதில் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இன்றைக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை வருத்தத்துக்குரியது. கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இதற்கெல்லாம் உடனடியாக தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி எப்படி தீர்வு காணலாம்? என்று முடிவு செய்யப்படும்.

‘நீட்’ தேர்வு குறித்து தேர்தல் பிரசாரத்திலே மையக்கருத்தாக வைத்தோம். முதல்-அமைச்சரும் ‘நீட்’ தேர்வை எந்த காலத்திலும் தமிழ் நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். தமிழக சட்டசபை கூடும்போது அது தொடர்பான அறிவிப்பு வரும்” என்று அவர் கூறினார்.

Next Story