பட்டமேற்படிப்பு காலத்தை நீட்டிக்காமல் பணி நியமனம் செய்யக்கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


பட்டமேற்படிப்பு காலத்தை நீட்டிக்காமல் பணி நியமனம் செய்யக்கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2021 7:51 PM GMT (Updated: 1 Jun 2021 7:51 PM GMT)

பட்டமேற்படிப்பு காலத்தை நீட்டிக்காமல் பணி நியமனம் செய்யக்கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்.

சென்னை,

பட்ட மேற்படிப்பு காலத்தினை நீட்டிப்பு செய்யாமல் முதுநிலை குடியிருப்பு டாக்டர்களாக அல்லது, அரசு உதவி டாக்டராக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகம் முன்பு அரசு சாரா சேவை டாக்டர்கள் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து நிருபர்களிடம் டாக்டர்கள் கூறியதாவது:-

அரசு சாரா சேவை டாக்டர்களான எங்களது படிப்பு முடிந்துவிட்டது. இதை மேலும் நீட்டிப்பது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கும் காலி பணியிடங்களுக்கு ஒரு கலந்தாய்வு வைத்து, அனைத்து அரசு சாரா சேவை டாக்டர்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மேலும், கொரோனா கால பணியை 2 வருட கட்டாய சேவைக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் எங்களது பணியை அங்கிகரீக்க கூடிய வகையில் செய்ய வேண்டும். அதேபோல், கொரோனா காலத்தில் பணிபுரியும் டாக்டர்களின் 2 வருட கட்டாய சேவைக்காலத்தை ஒரு வருடமாக குறைக்க வேண்டும்.

எங்களது ஒரு வருடகால கொரோனா பணியைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story