7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசி உள்ளோம்: சீமான் பேட்டி
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்தனர்.
சென்னை,
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீமான் கூறியதாவது: 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசி உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்து முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்
தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி அனைத்திலும் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். அனைத்துத் துறைகளும் வேகமாக இயங்குகின்றன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்” என்றார். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று பாரதிராஜா பேட்டி அளிக்கையில் கூறினார்.
Related Tags :
Next Story