சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை; அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார்: எடப்பாடி பழனிசாமி


சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை; அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார்: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 4 Jun 2021 8:36 AM GMT (Updated: 4 Jun 2021 8:36 AM GMT)

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார், அது நடக்காது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை, 

சென்னையில் அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முன்னாள் முதல்வரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

*கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக

*கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள்

*கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

*கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்

*கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக் கூடாது; முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்

*சசிகலா அதிமுகவில் இல்லை; அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார்.

*அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார், அது நடக்காது

*சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் ஆலோசனைக்கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. 

*ஓ பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.


Next Story