ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? அன்புமணி ராமதாஸ்


ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 15 Jun 2021 9:58 PM GMT (Updated: 15 Jun 2021 9:58 PM GMT)

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தன்னுடைய ‘டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஒரு நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 4-ல் 3 பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும், வணிகம் மட்டும் கிட்டதட்ட இரு மடங்கு நடந்து இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை 
மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு. கொரோனா நிதி உதவியாக ரூ.4 ஆயிரத்து 200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்க உள்ளது. ஆனால் தினசரி ரூ.165 கோடிக்கு மது விற்றால், ஒரு மாதத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை மக்களிடம் இருந்து மதுவை கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து, மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story