தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 2:13 PM GMT (Updated: 17 Jun 2021 2:13 PM GMT)

தமிழகம் முழுவதும் தற்போது 1,00,523 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 1,75,010 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 22,720 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,66,793-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,00,523 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story