தமிழகத்தில் மேலும் 7,427- பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 7,427- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Jun 2021 2:03 PM GMT (Updated: 21 Jun 2021 2:06 PM GMT)

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,427- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 29 ஆயிரத்து 924- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக இன்று 189-  பேர் உயிரிழந்துள்ளனர்.  

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 15,281-பேர் குணம் அடைந்துள்ளனர்.தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 329- ஆக குறைந்துள்ளது.

தொற்று பாதிப்பை கண்டறிய  இன்று 1 லட்சத்து 70 ஆயிரத்து 923- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 439- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 881- பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story