கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
x
தினத்தந்தி 21 Jun 2021 11:57 PM GMT (Updated: 21 Jun 2021 11:57 PM GMT)

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி இரண்டாவது அணு உலையில் டர்பன் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதன்பின்னர் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி நேற்று அதிகாலையில் தொடங்கியது. தற்போது 660 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை அடையும் என அணு மின்நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. முதல் அணு உலையில் ஏற்கனவே 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story