வேலூர் லாரி மீது பைக் மோதல்: ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழப்பு


வேலூர் லாரி மீது பைக் மோதல்:  ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 4:48 AM GMT (Updated: 22 Jun 2021 4:48 AM GMT)

வேலூரில் லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் பாஸ்மார்பணடா பகுதியை சேர்ந்தவர் ராஜா.  கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார்.  இவரது மனைவி காமாட்சி.  இந்த தம்பதியின் மகன்கள் சரண் (வயது 6), விண்ணரசன்(வயது 4).

இவர்கள் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களது பைக் மீது எதிரே பெங்களூரில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த ராஜா, அவரது மனைவி காமாட்சி, மகன் விண்ணரசு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சரண் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனர் முருகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story