துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை...போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி..?


துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை...போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி..?
x
தினத்தந்தி 25 Jun 2021 4:56 AM GMT (Updated: 25 Jun 2021 7:59 AM GMT)

சிறுமிக்கும் சிறுமியின் தாய்க்கும், விலை உயர்ந்த ஐ போன் வாங்கி கொடுத்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி? என்ற விவரம் தெரியவந்து உள்ளது.

சென்னை

துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன் முழு விவரம் வருமாறு:-

வடசென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் தாய் ஒருவர், ரேஷன்  கடை ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். அவருக்கும், மாதவரம் துணை கமிஷனர் தனிப்படையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒன்றாக இருந்ததை அப்பெண்ணின் மகள் பார்த்தாகச் சொல்லப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, தன்னுடைய தந்தையிடம் இதனை சொல்லப்போவதாகக் கூறியிருக்கிறார். அதனால், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரும் சிறுமியின் தாயும் சிறுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

சதீஷ்குமார், சிறுமியின் தாய் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்த போது இருவரும் அடிக்கடி பேசியது தெரியவந்திருக்கிறது. மேலும் சிறுமியின் தாய்க்கும், சிறுமிக்கும் பரிசாக விலை உயர்ந்த ஐ போனை சதீஷ்குமார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சிறுமியை அவரின் தாய், பெரியம்மா ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமாருடன் பழக வைத்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால் சிறுமிக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் சதீஷ்குமார், துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக சிறுமி விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். 

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மறுத்திருக்கிறார். விசாரணை மற்றும் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சிறுமியின் அம்மா, பெரியம்மா ஆகியோரைக் கைது செய்யப்ப்ட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய். சிறுமிக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லைக் கொடுக்கவில்லை' என்று கூறியிருக்கிறார்.

Next Story