மத்திய அரசிடம் எடுத்துக்கூறி, எல்.முருகன் தடுப்பூசி பெற்றுத்தர வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மத்திய அரசிடம் எடுத்துக்கூறி, எல்.முருகன் தடுப்பூசி பெற்றுத்தர வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 28 Jun 2021 9:14 AM GMT (Updated: 28 Jun 2021 9:14 AM GMT)

தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எல்.முருகன் கூறியிருந்த நிலையில், இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சென்னை, 

மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசு எவ்வளவு பயன்படுத்தியது, மேலும் எவ்வளவு வீணடித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்களில் தி.மு.க வினர் அதிகாரிகளை மிரட்டி டோக்கன்களை பறிப்பதை நிறுத்தினால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்றும் பற்றாக்குறைக்கு தி.மு.க-தான் காரணம் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில் மத்திய அரசிடம் எடுத்துக்கூறி, எல்.முருகன் தடுப்பூசி பெற்றுத்தர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “தமிழகத்தில் தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக 3 முறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு வருகிறேன். தடுப்பூசி வருகை மற்றும் கையிருப்பு குறித்து தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் எடுத்துக்கூறி எல்.முருகன் தடுப்பூசி பெற்றுத்தர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story