முன்னாள் அமைச்சர் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு; டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்


முன்னாள் அமைச்சர் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு; டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Jun 2021 9:20 AM GMT (Updated: 30 Jun 2021 9:20 AM GMT)

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக தனியார் மருத்துவமனை டாக்டர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை

நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பெங்களூரூ பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது கடந்த 20-ந் தேதி தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

அவரிடம் இருந்து செல்போனை ஆய்வு செய்தபோது, நடிகையுடன் அந்தரங்கமாக இருந்தற்கான ஏராளமான ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில், வருகிற ஜூலை 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கோபாலபுரம் தனியார் மருத்துவமனை டாக்டர்  அருண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விசாரணையில், நடிகைக்கு டாக்டர் அருண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை அழைத்து விசாரித்த போது,  மணிகண்டனின் கட்டாயத்தின் பேரிலேயே நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாககவும், அது  தொடர்பான மருத்துவ ஆவணங்கள் எதுவும் தன்னிடம் தற்போது இல்லை என்றும், அவை காணாமல் போய்விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.     

Next Story