"அம்மாவின் மறு உருவமே சின்னம்மா" சசிகலாவிற்கு ஆதரவாக மதுரை முழுவதும் போஸ்டர்கள்


அம்மாவின் மறு உருவமே சின்னம்மா சசிகலாவிற்கு ஆதரவாக  மதுரை முழுவதும் போஸ்டர்கள்
x
தினத்தந்தி 1 July 2021 4:55 AM GMT (Updated: 1 July 2021 4:55 AM GMT)

மதுரை மாவட்டம் முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவாக அ.தி.மு.க புறநகர் மாவட்ட கிழக்கு மகளிர் அணி துணைச் செயலாளர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை

அ.தி.மு.க.வை வழிநடத்த சசிகலாவை வேண்டுகோள் விடுக்கும் வகையில் அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஆனால் யார்? யாரிடமோ? போன் போட்டு பேசி அதை சசிகலா காட்சிப்படுத்தி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினர் கூட கிடையாது. அதனால் 10 பேர் என்ன? ஆயிரம் பேரிடம் அவர் பேசினாலும் கவலை இல்லை என கூறினார்.

இந்த நிலையில், இன்று அ.தி.மு.க புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ' ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன் மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், அண்ணாநகர், செல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போஸ்டர் ஒட்டியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அ.தி.மு.க மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story