டாஸ்மாக் கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி


டாஸ்மாக் கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
x
தினத்தந்தி 2 July 2021 5:31 PM GMT (Updated: 2 July 2021 5:31 PM GMT)

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

Next Story