தமிழகத்தில் 8,16,890 அளவிற்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு செலுத்த போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
சென்னை,
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 1,56,26,550 தடுப்பூசிகள் வந்து இருக்கும் நிலையில், 1,48,64,430 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 8 லட்சத்து 69 ஆயிரம் வரை தடுப்பூசிகள் வந்துள்ளன. இப்போது 8,16,890 அளவிற்கு தடுப்பூசி நம் கையிருப்பாக இருக்கிறது. இதனை வைத்து 2, 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story