கொந்தகையில் அகழாய்வு: ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
கொந்தகையில் அகழாய்வு: ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-வது கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பணி, ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது.கொந்தகையில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த வாரம் மனித எலும்புக்கூடு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முழு உருவ மனித எலும்புக்கூடு கிடைத்தது. இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நேற்றும் அதே இடத்தில் தொடர்ந்து நடைபெற்றன. இதில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் ஆணுடையதா, பெண்ணுடையதா என தெரிய வரும். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர்களுடையது என்பதும் தெரிய வரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-வது கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பணி, ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது.கொந்தகையில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த வாரம் மனித எலும்புக்கூடு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முழு உருவ மனித எலும்புக்கூடு கிடைத்தது. இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நேற்றும் அதே இடத்தில் தொடர்ந்து நடைபெற்றன. இதில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் ஆணுடையதா, பெண்ணுடையதா என தெரிய வரும். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர்களுடையது என்பதும் தெரிய வரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story