மின்வினியோகம், பராமரிப்பு தொடர்பான 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு மின்சார வாரியத்துறை தலைவர் தகவல்


மின்வினியோகம், பராமரிப்பு தொடர்பான 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு மின்சார வாரியத்துறை தலைவர் தகவல்
x
தினத்தந்தி 4 July 2021 5:12 AM GMT (Updated: 4 July 2021 5:12 AM GMT)

மின்வினியோகம், பராமரிப்பு தொடர்பான 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு மின்சார வாரியத்துறை தலைவர் தகவல்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று நடந்த மின்வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக மின்சார வாரியத்துறை தலைவர் ராஜேஷ் பி.லக்கானி பேசியதாவது:- மின் நுகர்வோர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தினார். அந்த மையத்திற்கு கடந்த 10 நாட்களாக நிறைய புகார்கள் வந்தன.

தமிழகம் முழுவதிலும் இருந்து 57,717 புகார்கள் வரப்பெற்றதில் 51,500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் 6 ஆயிரம் புகார்கள் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட 90 சதவீத புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story