புதுக்கோட்டையில் மாணவர் சேர்க்கைக்காக அவ்வை வேடத்தில் வந்த ஆசிரியை


புதுக்கோட்டையில் மாணவர் சேர்க்கைக்காக அவ்வை வேடத்தில் வந்த ஆசிரியை
x
தினத்தந்தி 4 July 2021 9:23 PM GMT (Updated: 4 July 2021 9:23 PM GMT)

புதுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அவ்வை வேடம் அணிந்து ஆசிரியை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

புதுக்கோட்டை,

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்-லைன், வாட்ஸ்-அப், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியை யுனைஸ்ரீ கிறிஸ்டி ஜோதி என்பவர் பள்ளியில் மாணவர் சேர்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வை வேடம் அணிந்து வண்டிபேட்டை பகுதியில் பாட்டுப்பாடி, நெல்லிகனிகளை அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு வழங்கி பள்ளியில் சேர வலியுறுத்தினார். 

மேலும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படுவதை படிக்க அறிவுறுத்தினார். வித்தியாசமான இவரது விழிப்புணர்வு நடவடிக்கை அனைவரையும் கவர்ந்தது.

Next Story