மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து


மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 7 July 2021 11:15 PM GMT (Updated: 7 July 2021 11:15 PM GMT)

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ராஜினாமா செய்திருப்பது, தொற்றுநோயை நிர்வகிப்பதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது என்ற நேர்மையான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்த ராஜினாமாக்களில் மந்திரிகளுக்கு ஒரு பாடம் இருக்கிறது. நடப்பது நன்றாக இருந்தால், அதனுடைய புகழ் பிரதமருக்கு சென்றடையும். தவறாக நடந்தால், மந்திரி வீழ்ச்சி அடைந்துவிடுவார்.

மறுப்பு இல்லாத கீழ்படிதலுக்கும், கேள்வி கேட்காத பணிவுக்கும் ஒரு மந்திரி செலுத்தும் விலை இதுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story