போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கட்சி வித்தியாசம் இன்றி பணி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அப்பாவி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அவர்கள் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களை பழிவாங்குவது என்பது தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தொழில் உறவை சீர்குலைப்பதாகவும் அமையும்.
எனவே அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, கட்சி வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும், பணியிட மாற்றம், இலகுப்பணி, பதவி உயர்வு என அனைத்தும் விதிகளுக்குட்பட்டு நடைபெறவும் முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அப்பாவி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அவர்கள் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களை பழிவாங்குவது என்பது தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தொழில் உறவை சீர்குலைப்பதாகவும் அமையும்.
எனவே அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, கட்சி வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும், பணியிட மாற்றம், இலகுப்பணி, பதவி உயர்வு என அனைத்தும் விதிகளுக்குட்பட்டு நடைபெறவும் முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story