ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக உயர்வு


ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக உயர்வு
x
தினத்தந்தி 8 July 2021 10:42 AM GMT (Updated: 8 July 2021 10:42 AM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை அடுத்த பிலிகுண்டுலு பகுதியில், தமிழககத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 6,500 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 20 நாட்களாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 3 நாட்களாக 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தமிழக எல்லை மற்றும் ஒகேனக்கல், அஞ்செட்டி உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Next Story