“மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு” - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை


“மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு” - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
x
தினத்தந்தி 16 July 2021 6:37 PM GMT (Updated: 16 July 2021 6:37 PM GMT)

மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தவிட்டார். 

இந்நிலையில் நேற்று(ஜூலை 16) சென்னை தி.நகரில் உள்ள, கமலாயத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய அமைச்சரும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இல. கணேசன், சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story