கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார் கொலை கைதான மருமகன் பரபரப்பு வாக்குமூலம்


கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார் கொலை கைதான மருமகன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 18 July 2021 7:48 PM GMT (Updated: 18 July 2021 7:48 PM GMT)

நெல்லை அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 60). இவருடைய மனைவி ராஜலட்சுமி (45). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த கணவர் வேலாயுதம், மருமகன் அபிமன்யு (33) ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் ராஜலட்சுமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனை தடுக்க முயன்றதில் அன்பழகன் (30) என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதம், அபிமன்யு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கைதான அபிமன்யு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

கணவரை பிரிந்தார்

நான் மூலைக்கரைப்பட்டி கல்லத்தி கிராமத்தில் பெயிண்டராக வேலை செய்து வருகிறேன். எனக்கும், வேலாயுதம் மகள் அனுஷியாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

எனது மாமனார் வேலாயுதம் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் மாமியார் ராஜலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக, மாமனார் வேலாயுதத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே ஊரில் வேலாயுதம் மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கள்ளக்காதல்

பின்னர் ராஜலட்சுமிக்கும், திருச்சியைச் சேர்ந்த அன்பழகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 6 மாதங்களாக அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அன்பழகன் தினமும் மோட்டார் சைக்கிளில் ராஜலட்சுமியை வேலைக்கு அழைத்து சென்று வந்தார். ராஜலட்சுமியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு நாங்கள் கூறியும் அவர் மறுத்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன்பு என்னுடைய மனைவி அனுஷியாவும் கருத்து வேறுபாடு காரணமாக என்னை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாயார் ராஜலட்சுமி வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்து விட்டார். மாமியார் ராஜலட்சுமியும் அனுஷியாவை என்னுடன் அனுப்பி வைக்க மறுத்தார்.

வெட்டிக் கொன்றோம்

நேற்று முன்தினம் இரவில் ராஜலட்சுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அன்பழகன் வீட்டுக்கு வந்தார். இதுகுறித்து மாமனார் வேலாயுதம் எனக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

உடனே நானும், மாமனார் வேலாயுதமும் அங்கு சென்று, தெருவிளக்கை அணைத்து விட்டு, வீட்டுக்குள் புகுந்து மிளகாய் பொடியை வீசி ராஜலட்சுமியையும், அன்பழகனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினோம். இதில் ராஜலட்சுமி இறந்தார். பின்னர் தப்பி சென்ற எங்களை போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அபிமன்யு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story