பக்ரீத் பண்டிகை; தமிழக கவர்னர் வாழ்த்து


பக்ரீத் பண்டிகை; தமிழக கவர்னர் வாழ்த்து
x
தினத்தந்தி 21 July 2021 1:57 AM GMT (Updated: 21 July 2021 1:57 AM GMT)

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

“ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி நம்முடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனித நாள் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மனிதகுலத்துக்கான சேவையை குறிக்கிறது. 

இந்த திருநாளில் பிரார்த்தனை, இரக்கம், தாராள மனப்பான்மை ஆகியவற்றின் பாதையை கடைப்பிடிக்க நாம் அனைவரும் தீர்மானிப்போம். இந்த திருவிழா அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story