இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097-பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 July 2021 3:58 AM GMT (Updated: 24 July 2021 3:58 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 546- பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 546-பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 016- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,08,977- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த  24 மணி நேரத்தில் 35,087- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று மீட்பு விகிதம் 97.36 சதவிகிதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.40 சதவிகிதமாக உள்ளது. 

Next Story