போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 July 2021 2:55 AM GMT (Updated: 25 July 2021 2:55 AM GMT)

போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராஜன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநில குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிராக போராடிய விவசாயிகள், விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிப்பு, எரிவாயு குழாய் பதிப்பு போன்ற திட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story