சி.ஐ.எஸ்.சி.இ. தேர்வு முடிவு வெளியீடு 275 மாணவ-மாணவிகள் தோல்வி


சி.ஐ.எஸ்.சி.இ. தேர்வு முடிவு வெளியீடு 275 மாணவ-மாணவிகள் தோல்வி
x
தினத்தந்தி 25 July 2021 4:57 AM GMT (Updated: 25 July 2021 4:57 AM GMT)

சி.ஐ.எஸ்.சி.இ. தேர்வு முடிவு வெளியீடு 275 மாணவ-மாணவிகள் தோல்வி.

சென்னை,

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ.) 10 (ஐ.சி.எஸ்.இ.), 12 (ஐ.எஸ்.சி.)-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை கொரோனா காரணமாக ரத்து செய்தது. அவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறையை அறிவித்து, அதன்படி கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வை 2 லட்சத்து 19 ஆயிரத்து 499 பேர் எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டதில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 454 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் 45 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை.

இதேபோல், 12-ம் வகுப்பு தேர்வை எழுத இருந்த 94 ஆயிரத்து 11 பேரில், 93 ஆயிரத்து 781 பேர் தேர்ச்சி பெற்று அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வில் 230 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் 2 தேர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 275 மாணவ-மாணவிகள் தோல்வியை தழுவி இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

சி.ஐ.எஸ்.சி.இ. இந்தியாவில் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பள்ளிகள் செயல்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ள தெற்கு மண்டலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பு தேர்வில் 99.91 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல கல்வி வாரியங்கள் கொரோனா காரணமாக தேர்வு நடத்தாமலேயே அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து மதிப்பெண்கள் வழங்கி வருகின்றனர்.

Next Story