கார்கில் வெற்றி நாள்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி


கார்கில் வெற்றி நாள்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி
x
தினத்தந்தி 27 July 2021 1:16 AM GMT (Updated: 27 July 2021 1:16 AM GMT)

கார்கில் வெற்றி நாள்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் உருவப்படங்களுக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி அண்ணாமலை, இல.கணேசன் பங்கேற்பு.

சென்னை,

1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் ஜூலை மாதம் 26-ந் தேதி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் கார்கில் வெற்றி நாள் நிகழ்ச்சி சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். மூத்த தலைவர் இல.கணேசன், ராணுவ பிரிவின் துணைத்தலைவர் கேப்டன் ஜி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், ஊடக பிரிவு மாநில தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

இதில் கார்கில் போரில் உயிரிழந்த 527 ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேஜர் சரவணன் உள்பட வீரர்கள் உருவப்படங்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்கள் சிலர் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கே.அண்ணாமலை பேசும்போது, ‘போலி சித்தாத்தங்களை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை பிரிந்தாளும் சூழ்ச்சியை சிலர் செய்து வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உண்மையான தேசியம் சென்றடைய வேண்டும்’ என்றார்.

Next Story