திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 July 2021 5:51 AM GMT (Updated: 28 July 2021 5:51 AM GMT)

திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அதிமுக ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.   திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நீட்தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி போராட்டம் நடைபெற்றது.

 போராட்டத்திற்கிடையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  10 ஆண்டுகள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தது அதிமுக அரசு. 

முந்தைய அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது.

 திமுகவின் பெட்ரோல், டீசல் விலை  குறைப்பு வாக்குறுதி என்னாச்சு? திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அதிமுக ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்” என்றார். 

Next Story