அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்


அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 28 July 2021 7:36 AM GMT (Updated: 28 July 2021 10:09 AM GMT)

அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

போடி,

போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அ.தி.மு.க.வினர் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதன் பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நானும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் அதிமுக.,வை வழிநடத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நிலை தொடரும். ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய மத்தியில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கக்கூடிய பாஜகவுக்குத்தான் உரிமை உள்ளது” என்றார். 


Next Story