அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க..? எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்த மனுவை அமர்ந்தவாறு வாங்கிய கலெக்டர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்.
கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.கதான் வென்றுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை ரத்து செய்யக்கூடாது, தொகுதிகளில் நடைபெறும் அரசு பணி தொடக்க நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க கொறாடா எஸ்.பி வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள், கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மனு கொடுக்க வந்தனர்.
கலெக்டர் சமீரன் அமர்ந்தபடியே எம்.எல்.ஏ-க்களிடம் மனு வாங்கினார். இதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக, பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் சமீரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை அமைதியாக இருக்கும்படி வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் கூறினர். ஆனாலும் ஜெயராமன், செல்வராஜ் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
என்ன இப்படி பண்றீங்க..? இது ரொம்ப தவறு சார்..” என்ன பழக்கம் இது..? நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன். இந்தப் பழக்கம் எல்லாம் ரொம்ப தவறுங்க..” என்று ஜெயராமன் கூறினார். அதேபோல செல்வராஜ், “இது என்ன புது பழக்கம்?” என்று கேட்டார்.
Related Tags :
Next Story