முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை
நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தன்னிடம் நடிகை பணம் பறிக்க முயன்றதாகவும், அது முடியாததால் பொய் புகார் அளித்ததாகவும், எனவே விசாரணைக்கு தடை விதிக்க கோரி மணிக்கண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. அதோடு, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், நடிகை சாந்தினி ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story