பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்


பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது -  உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Aug 2021 5:29 AM GMT (Updated: 7 Aug 2021 5:29 AM GMT)

சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அந்த பதிவில், ''முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story