ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா என்பவர், தனது பேத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டின் முன்பாக உள்ள கம்பியில் துணியை காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கம்பியில் ஈரத்துணி பட்டதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
அவர்கள் அலறம் சத்தம் கேட்டு, காப்பாற்ற வந்த இந்திராவின் மகள் மாகாலட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story