அரசின் பொருளாதாரமும், தனி மனிதர்களின் பொருளாதாரமும் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும் - முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் வளமான தமிழகத்தை உருவாக்க நினைத்தார்கள் என முதல் அமைச்சர் சுதந்திர தின உரையில் பேசினார்.
சென்னை,
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார். தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்பு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
- இந்தியாவில் அனைத்து முதல் அமைச்சர்களுக்கும் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பை பெற்று வந்தவர் கலைஞர் கருணாநிதி
- வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட திட்டம்.
- கார்கில் போரின் போது பிரதமரிடம் 3 தவணைகளாக ரூ.50 கோடி வழங்கிய அரசு அன்றைய திமுக அரசு.
- தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக் காற்றை கொண்டு கட்டப்பட்டது தான் நினைவுத் தூண்.
- செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு 150ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட இருப்பது இந்த ஆண்டில் தான்
- கொரோனா எதிர்ப்பு போரில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
- கொரோனா தொற்று ஏராளமான படிப்பினையை நமக்கு தந்துள்ளது
- கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.4 ஆயிரம் 2 தவணைகளாக வழங்கப்பட்டது
- பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழக மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்று 101ஆவது நாள்.
- பெரும் நிதி சுமைக்கு இடையில் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறேன்
- தடுப்பூசி வீணடிக்கப்பட்ட நிலையை மாற்றி அதிகமாக தடுப்பூசி செலுத்தும் மாநிலமாக மாறி இருக்கிறோம்.
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை தீர்த்து வருகிறது அரசு.
- மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் .
Related Tags :
Next Story