அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது


அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 20 Aug 2021 8:15 PM GMT (Updated: 20 Aug 2021 8:15 PM GMT)

அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது.

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தற்போது கேரள மாநிலம் ஆலப்புழாவில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். கர்ப்பமாக இருந்ததால் பெற்றோர் வீட்டில் இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேருமாறு அறிவுறுத்தினர். ஆனால் தர்மலாஸ்ரீ கடந்த 11-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அவர், பிரசவ வார்டில் மற்ற பெண்களுடன் தங்கி இருந்தார். சப்-கலெக்டர் தர்மலாஸ்ரீக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தாயையும், அவரது குழந்தையையும் பார்த்துவிட்டு சென்றனர்.

Next Story