சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை தொடரும்


சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை தொடரும்
x
தினத்தந்தி 21 Aug 2021 4:43 AM GMT (Updated: 21 Aug 2021 4:43 AM GMT)

சென்னை எழும்பூர்,சென்ட்ரல் , புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி , பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதுபோல் தர்மபுரியில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு , திருவள்ளூரில் புழல் செங்குன்றம், அலமாதி, கிருஷ்ணகிரியில் போச்சம்பள்ளி, புலியூர், கிருஷ்ணகிரியில் அரசம்பட்டி, செல்லம்பட்டி பகுதிளிலும், சேலத்தில் ஆத்தூரிலும் , புதுச்சேரியில் வில்லியனூர், காலாப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம் உள்ளிட்ட  பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னையில் வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர்,சென்ட்ரல் , புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி , பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் , அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் உள்பப பெரும்பாலான இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கடந்த 20 நிமிடங்களுக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Next Story