மத்திய ஆட்சியை அகற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் திரண்டால் வெற்றி: கி.வீரமணி


மத்திய ஆட்சியை அகற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் திரண்டால் வெற்றி: கி.வீரமணி
x
தினத்தந்தி 22 Aug 2021 8:13 AM GMT (Updated: 22 Aug 2021 8:13 AM GMT)

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2024-ல் மத்திய ஆட்சியை, அப்போது நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் மாற்றுவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி புதுடெல்லியில் காணொலி மூலம் ஒத்த கருத்துள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; சரியான ஜனநாயக பாதுகாப்பு நடவடிக்கையும் ஆகும். 19 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளதில், தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். 2024 தேர்தலுக்கான ஆயத்தமாக முதல் முயற்சியை இப்போதே தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

மத்திய அரசுக்கு எதிராக அடுத்த மாதம் (செப்டம்பர்) 20 முதல் 30-ந்தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் திரண்டால், வெற்றிதானே கனிவது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story