சட்டப்பேரவை தேர்தல் வெற்றி: 4 பா.ஜ.க மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிப்பு


சட்டப்பேரவை தேர்தல் வெற்றி: 4 பா.ஜ.க மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 12:41 PM GMT (Updated: 22 Aug 2021 12:41 PM GMT)

சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து 4 பா.ஜ.க மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னை, 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றால் அந்த தொகுதி அடங்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என்று பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் எம் ஆர். காந்தி (நாகர்கோவில்), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 4 தொகுதி மாவட்ட தலைவர்களுக்கு பா.ஜனதா சார்பில் இன்று இன்னோவா கார் பரிசு அளிக்கப்பட்டது. பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்டச் செயலாளர் நந்தகுமார், நெல்லை மாவட்டச் செயலாளர் மகாராஜன், ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தர்மராஜன் ஆகியோருக்கு மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கார்களைப் பரிசாக வழங்கினர். 

Next Story