தேசிய மீன்வள மசோதாவை கண்டித்து கருப்பு கொடியுடன் மீனவர்கள் போராட்டம்


தேசிய மீன்வள மசோதாவை கண்டித்து கருப்பு கொடியுடன் மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2021 10:05 PM GMT (Updated: 22 Aug 2021 10:05 PM GMT)

தேசிய மீன்வள மசோதாவை கண்டித்து சின்னவிளை கடற்கரையில் மீனவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் தேசிய கடல் வள மேலாண்மை மற்றும் ஒழுங்கு முறை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு (பெடா) சார்பில் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சின்னவிளை கடற்கரையில் மீனவர்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சின்னவிளை பங்கு பேரவை தலைவர் சகாய ஜெரோம், விஜய் வசந்த் எம்.பி உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

கருப்பு கொடியுடன்

இதில், சின்னவிளை ஏரோணிமூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெடா ஆலோசகர் சூசை நாயகம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சின்னவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் கடற்கரையில் கைகளில் கருப்பு கொடியை ஏந்தியபடி மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story