ஆபாச வீடியோ விவகாரம்: கே.டி.ராகவனிடம் பா.ஜ.க. குழு உடனடி விசாரணை
ஆபாச வீடியோ விவகாரம்: கே.டி.ராகவனிடம் பா.ஜ.க. குழு உடனடி விசாரணை.
சென்னை,
தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், அரை நிர்வாண கோலத்தில் ‘வாட்ஸ்அப்’ வீடியோ காலில் ஒரு பெண்ணிடம் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்றுமுன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து கே.டி.ராகவன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் மலர்க்கொடி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை உடனடியாக நியமித்தார். இந்தக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து விசாரணைக்குழு தலைவரான பா.ஜ.க. மாநிலச் செயலாளர் மலர்க்கொடி கூறியதாவது:-
கே.டி.ராகவன் மீதான பாலியல் புகார் தொடர்பாக நாங்கள் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளோம். சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. கே.டி.ராகவனிடமும் விரிவாக விசாரிப்போம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர் என்பதால், அவருக்கு இதுபோன்ற குற்றங்கள் எந்த மாதிரி நிகழும் என்பது நன்றாகவே தெரியும். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், அரை நிர்வாண கோலத்தில் ‘வாட்ஸ்அப்’ வீடியோ காலில் ஒரு பெண்ணிடம் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்றுமுன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து கே.டி.ராகவன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் மலர்க்கொடி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை உடனடியாக நியமித்தார். இந்தக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து விசாரணைக்குழு தலைவரான பா.ஜ.க. மாநிலச் செயலாளர் மலர்க்கொடி கூறியதாவது:-
கே.டி.ராகவன் மீதான பாலியல் புகார் தொடர்பாக நாங்கள் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளோம். சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. கே.டி.ராகவனிடமும் விரிவாக விசாரிப்போம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர் என்பதால், அவருக்கு இதுபோன்ற குற்றங்கள் எந்த மாதிரி நிகழும் என்பது நன்றாகவே தெரியும். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story