சென்னை சென்ட்ரல் - கயா உள்பட 10 சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு; தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை சென்ட்ரல் - கயா உள்பட 10 சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிப்பு; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 4:08 AM GMT (Updated: 28 Aug 2021 4:08 AM GMT)

சென்னை சென்ட்ரல் - கயா உள்பட 10 சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.



சென்னை,


நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  சரக்கு ரெயில் சேவை இயங்கி வந்தது.  கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து காணப்படும் சூழலில் குறிப்பிட்ட அளவிலான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதிப்புகளால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவு ரெயில்கள், முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயில்கள், மறு அறிவிப்பு வரும் வரை தற்போது இயக்கப்படும் அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும். இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெரிவித்து உள்ளது.


Next Story