இன்று கிருஷ்ண ஜெயந்தி: பன்வாரிலால் புரோகித் வாழ்த்து


இன்று கிருஷ்ண ஜெயந்தி: பன்வாரிலால் புரோகித் வாழ்த்து
x
தினத்தந்தி 29 Aug 2021 7:59 PM GMT (Updated: 29 Aug 2021 7:59 PM GMT)

இன்று கிருஷ்ண ஜெயந்தி: பன்வாரிலால் புரோகித் வாழ்த்து.

சென்னை,

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழா, மகா விஷ்ணு, கிருஷ்ணராக 8-வது அவதாரமாக அவதரித்ததை கொண்டாடப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றிக்கொண்டதை குறிக்கும் வகையில் இந்த விழா குறிக்கிறது. 'பகவத் கீதையில்' பகவான் கிருஷ்ணர் வழங்கிய, பற்று இல்லாமல் நேர்மையுடன் நமது கடமைகளை செய்வதற்கான நித்திய செய்தி முழு மனிதகுலத்திற்கும் உத்வேகத்தை அளிக்கிறது. இந்த புனிதமான தருணத்தில், நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் பகவான் கிருஷ்ணரின் உலகளாவிய போதனைகளை பின்பற்ற உறுதியேற்போம். கிருஷ்ண ஜெயந்தி விழா அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நமது மாநிலத்துக்கு கொண்டுவரட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story