மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்


மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்
x
தினத்தந்தி 30 Aug 2021 10:53 PM GMT (Updated: 30 Aug 2021 10:53 PM GMT)

மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வருகிற 1-ந்தேதி (நாளை) முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சமுதாய தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் 1-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் தொடங்குகிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், பரமக்குடி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, சென்னை, திருவாரூர், மதுரை, கன்னியா குமரி, சிவகங்கை, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இதற்காக நிர்வாகிகள் கொண்ட சுற்றுப்பயண குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் தமிழக பா.ஜ.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story