கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Aug 2021 11:03 PM GMT (Updated: 30 Aug 2021 11:03 PM GMT)

கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் 7-ம் கட்ட அகழாய்வில் கணக்கெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 அகழாய்வுகளில்5 ஆய்வுகளின் அறிக்கை வெளியாகாதது வருத்தமளிக்கிறது.

கீழடி அகழாய்வின் முடிவுகளுக்காக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் 10 கோடிக்கும் மேலான தமிழர்கள் காத்துக் கிடக்கின்றனர். 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும், முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகளை உடனடியாக வெளியிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். 5 மற்றும் 6-ம் கட்ட அகழாய்வு அறிக்கைகளை தமிழக அரசு விரைவாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story