மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்


மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 1 Sep 2021 9:58 PM GMT (Updated: 1 Sep 2021 9:58 PM GMT)

மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்.

சென்னை,

மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

தற்போது வரை மின்சார ரெயிலில் பயணிக்க பழைய வரைமுறைகளே பின்பற்றப்படுகிறது. அந்த வரைமுறைகளில் பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும், பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாணவிகள் எப்போது வேண்டுமானாலும், ரெயிலில் பயணிக்கலாம்.

ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் மின்சார ரெயிலில் பயணிக்க, தங்களது பள்ளி, கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் சீசன் டிக்கெட் தேவை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து முறையான அனுமதிசீட்டை பெற்றுக்கொண்டு, அதை கவுண்ட்டர்களில் காண்பித்து சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story