பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை
பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கான பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை
தமிழக அரசின் பட்ஜெட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
அதன்படி குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-ல் இருந்து ரூ.110 ஆக உயரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story